மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
குமரியில், மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியுடன், அதனை சுற்றி உள்ள ஊராட்சிகளை இணைக்க அரசு முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும், மாநகராட்சிக்கான வரியால் பாதிப்புகள் ஏற்படும், விவசாயம், நூறுநாள் வேலைத்திட்டம் காணாமல் போகும் என்பது போன்ற பல்வேறு காரணங்களை தெரிவிக்கும் பொதுமக்கள், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சியுடன் அதனை சுற்றி உள்ள ஊராட்சிகளை இணைக்கும் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பிய ஊராட்சி தலைவர்கள் அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.