Begin typing your search above and press return to search.
குடியிருப்புகளுக்குள் புகுந்த மலைப்பாம்பு - வனத்துறையிடம் ஒப்படைப்பு
குமரியில், குடியிருப்புகளுக்குள் புகுந்த மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழ தத்தையார்குளம் கிராம பகுதியில் குடியிருப்புகளுக்குள் நேற்றிரவு மலைப்பாம்பு புகுந்தது. இதனை கண்ட நாய்கள் பலமாக குறைத்தால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் பார்த்த போது மலைப்பாம்பு செல்வதை கண்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாம்பை பிடித்ததோடு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் நடு இரவு நேரம் என்பதால் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் வராத நிலையில் பிடிபட்ட மலைப்பாம்பை வடசேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்க்கு கொண்டு சென்ற பொதுமக்கள் அங்கிருந்த அலுவலர்களிடம் பாம்பை ஒப்படைத்தனர்.