Begin typing your search above and press return to search.
எஸ்.பி அலுவலகத்தில் கொரோனா தொற்று
மாவட்ட எஸ்.பி அலுவலக கட்டுப்பாட்டு பிரிவு அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி. தடுப்பு பணிகள் தீவிரம்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றிய அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி பணியாளர்கள் அங்கு சென்று கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தில் இருந்த சக பணியாளர்களுக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.