/* */

வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது வழக்கு

வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது வழக்கு
X

ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் புதுக்கல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஷீபா. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மனோன்மணி, இவர்களுடைய மகன் மணிகண்டன் மற்றும் கவிதா, முருகன் ஆகியோர் ஷீபாவை வீடு புகுந்து தாக்கியதாக தெரிகிறது.

இது குறித்து ஷீபா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்ததின் பேரில் கோபாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதே போன்று தன்னை வீடு புகுந்து தாக்கியதாக கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரமேஷ்,ஷீபா, கண்ணன்,பிச்சிபாய் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்