Begin typing your search above and press return to search.
தீராத நோய் - தற்கொலை செய்து கொண்ட கட்டிடதொழிலாளி.
அகஸ்தீஸ்வரம்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் 53 வயதான ரவிச்சந்திரன். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில வருடங்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் கடந்த சில தினங்களாக மனமுடைந்து யாரிடமும் பேசாமல் அமைதியாக காணப்பட்டார். இந்நிலையில் வீட்டின் அருகிலுள்ள ஷெட்டின் மேல் கூரையில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள் தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.