/* */

புதிய மின்மாற்றி‌யினை எம்.பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர்

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மசமுத்திரம் ஊராட்சியில் 100 கே.வி.திறனுடைய புதிய மின்மாற்றி இயக்கி வைக்கப்பட்டது

HIGHLIGHTS

புதிய மின்மாற்றி‌யினை எம்.பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர்
X

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மசமுத்திரம் ஊராட்சியில் 100 கே.வி.திறன்கொண்ட புதிய மின்மாற்றியை துவக்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்.

காஞ்சிபுரம் ஒன்றியம் , திம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட திருப்பதி எஸ்டேட் பகுதியில் அவ்வபோது குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால் மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனிடம் புதிய மின்மாற்றி அமைத்துத் தர கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று திம்மசமுத்திரம் ஊராட்சியில் உள்ள திருப்பதி எஸ்டேட் பகுதிகளில் 100கே.வி.திறன்கொண்ட புதிய மின்மாற்றியை நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,ஒன்றிய கவுன்சிலர்பாலாஜி, ஊராட்சிமன்றத்தலைவர் தேவேந்திரன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.


Updated On: 29 Sep 2022 11:45 AM GMT

Related News