நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை , அயல்நாட்டு மதுபான கடை மற்றும் உரிமம் பெற்ற மதுபான கூடங்களை மூட காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை) விதிகள் 2003 விதி 12 மற்றும் துணைவிதி (2) உரிம நிபந்தனைகளின்படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் கீழ்கண்ட நாட்களில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பினை தொடர்ந்து,ஏப்ரல் 4,5,6 தேதிகளிலும் மேலும் வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற ஹோட்டலுடன் கூடிய மதுபானக் கூடங்கள், அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் சில்லறை விற்பனை டாஸ்மாக் மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்படி நாட்கள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.