/* */

கொட்டும் மழையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் : ஊழியர்களுக்கு குவியுது பாராட்டு

காஞ்சிபுரத்தில் இன்று கன மழை பெய்து வரும் நிலையிலும் 250 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஊழியர்களின் சிறப்பான பணிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

HIGHLIGHTS

கொட்டும் மழையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் : ஊழியர்களுக்கு குவியுது பாராட்டு
X


கோப்பு படம் 

தமிழகத்தில் கொரோனா நோயை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்படுவது மட்டுமில்லாமல் அவ்வப்போது தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதுவரை 7 முகாம்கள் நடைபெற்றுள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியினை 7 லட்சத்து 15 ஆயிரத்து 617 பேரும் இரண்டாவது தவணையைப் 2 லட்சத்து 99 ஆயிரத்து 768 நபர்களும் செலுத்திக் கொண்டு உள்ளனர்.

வாரம் ஒரு முறை சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் நடைபெற்று வந்த முகாம்கள் தற்போது வாரம் இருமுறை சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.

மேலும் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 485 நபர்களுக்கான சிறப்பு முகாம் இன்று மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அப்போது காலை 10 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கூட காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் என அறிவித்த சிறப்பு முகாம்கள் கொட்டும் மழையிலும் நடைபெற்று வருகிறது.

குறைந்த அளவே நபர்கள் வந்தாலும் ஊழியர்கள் சிறப்பு முகாமில் காலை 7 மணி முதலே முகாம் நடைபெறும் இடங்களில் மழையில் சாரலிலும் பொதுமக்கள் வருவார்கள் என காத்திருக்கும் இவர்களது செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.

Updated On: 18 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு