/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் மழை: அச்சத்தில் பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் மழை: அச்சத்தில் பொதுமக்கள்
X

காஞ்சிபுரத்தில் பெய்த கனமழை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என உருவாகி வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பாலாறு, செய்யாறு ஆகியவற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து பல இடங்களில் முடங்கியது.

இந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத பொதுமக்களுக்கு, மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது கனமழை மற்றும் தொடர் சாரல் மழை பொழிகிறது.

உத்திரமேரூர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து காலை 6 மணி வரை 32மிமீ மழை பெய்து உள்ளது. இந்நிலையில் தற்போது வரை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி தற்போது குறைந்த நிலையில் மீண்டும் மழையா என அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 12 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!