இப்பபோலவே... எப்பவுமே பெட் காலியா இருக்கணும்... அமைச்சர் தா.மோ.அன்பரசன்
புதிய 200 படுக்கைகள் வசதிகள் கொண்ட கோவிட் கேர் மையத்தினை திறந்த ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்..
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் புதியதாக 200 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் த .மோ. அன்பரசன் இன்று ரிப்பன் வெட்டி , குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார்.
புதிய மையத்தை திறக்கும் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், இப்போ போல .. எப்பவும் பெட் காலியாகவே இருக்கணும் என அனைவரும் வேண்டுமாறு கூறியதும் நகைச்சுவையுடன் அனைவரும் சிரித்து அவ்விடம் சிறுது நேரம் கலகலப்பானது..
எப்பவும் மருத்துவமனை வளர்ச்சி இருக்க வேண்டும் என எண்ணும் நிலையில் இதுபோன்ற பேரிடர் காலத்தில் மக்கள் எவ்வித நோய் தொற்றும் இல்லாமல் சுகாதாரமாக இருக்கவேண்டும் எனக் கூறியதாக கூறி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
அதன்பின் புதிய கோவிட் கேர் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் , எழிலரசன் , கு.செல்வப்பெருந்தகை ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தனியார் தொழிற்சாலை கம்பெனி சார்பாக ரூபாய் ஒரு கோடியே 40 லட்சத்து வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் கொடியசைத்து அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா , மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.