Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம்: ஏமாற்றத்தில் தேமுதிக
அமமுகவுடன் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சீட்டு கூட பெறமுடியவில்லை -சோகத்தில் தேமுதிக தொண்டர்கள் உள்ளனர்.
HIGHLIGHTS
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உடன் தேமுதிக 2021 சட்டமன்ற தேர்தல் உடன்படிக்கை ஏற்பட்டு தேர்தலில் போட்டியிட உள்ளனர். தேமுதிக பேச்சுவார்த்தைக்கு முன்பே அமமுக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் , ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் என 3 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்.
இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட போட்டியிட இயலாத நிலையில் உள்ளதால் தேமுதிக தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த கால தேர்தல்களில் இப்பகுதியில் தேமுதிக கணிசமான ஓட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இலவு காத்த கிளி என கூறுவது போல தேமுதிக கதை ஆகிவிட்டது என்பதால் தேர்தல் பணிக்கு வருவார்களா என்பது ஐயமாகியுள்ளது.