இந்த வேலையாகும் கிடைக்குமா? கடும் வெயிலில் நேர்முகத் தேர்விற்கு வந்த கர்ப்பிணிகள்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் 26 காலிபணியிடங்களுக்கு 4405 பேர் 3 நாட்கள் நடைபெறும் நேர்முக தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை துறை சார்பில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலி பணியிடத்திற்கு 4405 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் கால்நடை துறை துணை இயக்குனர் ஜெயந்தி தலைமையில் 70 பேர் கொண்ட குழுவினர் தேர்வு செய்யும் பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், சைக்கிள் ஓட்டுதல், கால்நடைகளை கையாளுதல், மற்றும் நேர்காணல் ஆகிய நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் , கர்ப்பிணிப் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகள் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளித்து நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர்.
இந்தத் தேர்வு இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்வில் பங்கேற்க நிறைமாத கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் பெண்கள், பொறியாளர் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டும் மாடுகளை செய்ய வேண்டும் தேர்வில் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்களை கேட்கும்போது, குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த வேலையாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் நிறை மாதத்தையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டு உள்ளோம் என தெரிவிக்கின்றனர். தேர்வு நடைபெற இதையொட்டி தீயணைப்பு துறையினர், மருத்துவர் தலைமையில் மருத்துவ குழுவினர் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.