ஐயங்கார்குளத்தில் புதிய நூலக கட்டிடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை
ஐயங்கார்குளம் கிராம ஊராட்சி நிர்வாகம் தானமாக நிலம் அளித்த நிலையிலும் வாடகை கட்டிடத்தில் தான் தற்போது நூலகம் இயங்கி வருகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த பாலாற்று கரையோரம் அமைந்துள்ளது ஐயங்கார் குளம் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி, தனியார் பொறியியல் , பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாவட்ட நூலகத்துறை சார்பில் வாடகை கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.
மேலும் கிராம ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவு, கிராம ஊராட்சிக்கு என ஒதுக்கப்பட்ட ஓஎஸ்ஆர் நிலத்தினை நூலக துறைக்கு, தான செட்டில்மென்ட் பதிவு செய்து அளித்துள்ளனர்.
இன்று புத்தக தின விழா கொண்டாடப்படும் நிலையில் புதிய கட்டிடம் கட்டி அனைத்து நூல்களும் வைக்கப்பட்டு அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் , இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் செயல்பட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம வாசகர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.