/* */

சுகாதார துணை இயக்குனர் லாக்கரில் ரூ. 30 லட்சம், 160 சவரன் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பழனியின் வங்கி லாக்கரில் இருந்து, ரூ.30 லட்சம், 160 சவரன் தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சுகாதார துணை இயக்குனர் லாக்கரில்  ரூ. 30 லட்சம், 160 சவரன் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் பழனி. இவருடைய அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர்,திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத பணம் ரூபாய் 2 லட்சத்து 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்ற ஆணை பெற்று பழனியின் வங்கிக் கணக்கு வைத்துள்ள திருமங்கலம் தனியார் வங்கி லாக்கரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது லாக்கரில் இருந்த கணக்கில் இல்லாத 29 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணமும், 160 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, காஞ்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு