Begin typing your search above and press return to search.
சுகாதார துணை இயக்குனர் லாக்கரில் ரூ. 30 லட்சம், 160 சவரன் பறிமுதல்
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பழனியின் வங்கி லாக்கரில் இருந்து, ரூ.30 லட்சம், 160 சவரன் தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் பழனி. இவருடைய அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர்,திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத பணம் ரூபாய் 2 லட்சத்து 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்ற ஆணை பெற்று பழனியின் வங்கிக் கணக்கு வைத்துள்ள திருமங்கலம் தனியார் வங்கி லாக்கரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது லாக்கரில் இருந்த கணக்கில் இல்லாத 29 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணமும், 160 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, காஞ்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.