Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சியில் பட்டாசு விற்பனை செய்த புத்தக கடைக்கு சீல்
கள்ளக்குறிச்சியில் பட்டாசு விற்பனை செய்த புத்தக கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சியில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாமல் பட்டாசு விற்பனை செய்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., (பொறுப்பு) சரவணன், கள்ளக்குறிச்சி நகரில் பட்டாசு விற்பனை செய்யும் புத்தக கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாமல் புத்தக கடையில் பட்டாசு கடை வைத்திருந்தது தெரியவந்தது. உடன், கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.டி.எஸ்.பி., ராஜலட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராமசாமி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் உடனிருந்தனர்.