கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ் கல்லூரியில் பத்திரிகையாளர் தின விழா
கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ் கல்லூரியில் பத்திரிகையாளர் தின விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார்.
டாக்டர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். செயலாளர் கோவிந்தராஜு, பள்ளி முதல்வர் மாலதி வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக இன்றைய சூழலில் பத்திரிகை ஊடகச் செய்திகள் மக்களை பண்படுத்துகிறதா, பதட்டப்படுத்துகிறதா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
இதில், கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயசீலன் நடுவராக பங்கேற்றார். தமிழ்த்துறை தலைவி பிரவீனா, மாணவி யமுனாராணி, மாணவர் நவீன் ஆகியோர் பண்படுத்துகிறது என்ற தலைப்பிலும், உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன், மாணவி ஐஸ்வர்யா, மாணவர் அரவிந்தன் ஆகியோர் பதட்டப்படுத்துகிறது என்ற தலைப்பிலும் பேசினர்.
நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.இதில், கல்லுாரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.