Begin typing your search above and press return to search.
புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக முருகேசன் பொறுப்பேற்பு
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜா தாமரை பாண்டியனை பணியிடை மாற்றம் செய்து டிஐஜி பாண்டியன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக முருகேசன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக முருகேசன் என்பவர் பொறுப்பேற்றுக்கொண்டார். காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட முருகேசனுக்கு சக காவலர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.