கோபி கலை கல்லூரியில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

கோபி கலை கல்லூரியில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
X

கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் கோபி கலை கல்லூரியில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (பிப்.3) நடைபெற்றது.

கோபி கலை கல்லூரியில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (பிப்.3) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சிறுவலூர் வட்டாரம் கோட்டுபுள்ளாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கோபி கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காசநோய், தொழுநோய் ஒழிப்பு, புகையிலை மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோய் சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவின் அவசியம், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்கம் நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் உடல் நல தீமைகள் புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை, தொழு நோய் பரவும் விதம் அதன் ஆரம்ப அறிகுறிகள், தொழுநோய்க்கான ஆரம்ப நிலை சிகிச்சையால் தவிர்க்கப்படும் அங்க ஹுனங்கள், தீவிர தொழு நோய் கண்டுபிடிப்பு முகாம் நோக்கம் மற்றும் பயன்கள், இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள் மற்றும் சமூக பின்னடைவுகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் பிரசவ கால தாய் சேய் மரணங்கள், இரத்த சோகை பாதிப்புகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் மரு.கௌசல்யா, மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், செவிலியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் 300 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய், தொழுநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளா்கள் 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்
கோபி அருகே வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
கோபி கலை கல்லூரியில் காசநோய், புகையிலை, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு க.குளத்தில் நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி நிகழ்ச்சி
இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
புன்செய்புளியம்பட்டி பள்ளி ஆசிரியர் கைது..!
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளர் தா்ணா போராட்டம்
நாளை மறுநாள் வாக்குப்பதிவு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரம்
பெரியாரிஸ்டுகள் என்னிடம் மண்டியிட்டு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்- இடைவிடாமல் தாக்கும் சீமான்..!
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் சர்வதேச வெளியுறவு கொள்கை மாநாடு
பொட்டுச்சாமி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களின் ஆன்மிக உற்சாகம் வெள்ளமாக பெருகியது..!
போக்குவரத்து விதிமுறை மீறியதாக 1,675 வழக்குகள் பதிவு
3ம் கட்ட பயிற்சியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு எந்திர பயிற்சி