சத்தியமங்கலம் கெஞ்சலூர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
![சத்தியமங்கலம் கெஞ்சலூர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம் சத்தியமங்கலம் கெஞ்சலூர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்](https://www.nativenews.in/h-upload/2025/02/08/1976734-picsart25-02-0823-19-22-055.webp)
இக்கரை நெகமம் புதூரில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாமில் எடுக்கப்பட்ட படம்.
சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (பிப்.8) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரம் ராஜன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கெஞ்சனூர் ஊராட்சி இக்கரை நெகமம் புதூர் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கண்ணன், காசநோய் சுகாதாரப் பார்வையாளர் ரேணுகா, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu