அந்தியூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு, கண்டறிதல் முகாம்
அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.
அந்தியூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (பிப்.1) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் சின்னத்தம்பி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட அந்தியூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காச நோய் சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்ள வேண்டியதின் அவசியம், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் ஒழிப்பில் பொது மக்களின் பங்கு குறித்து விளக்கமாக சுகாதார கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சக்தி கிருஷ்ணன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சண்முகம், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காசநோய் சிகிச்சை பார்வையாளர் சண்முகவடிவு, ஆய்வக நுட்புநர் தேவி அபிராமி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 95 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக நுண்கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu