Begin typing your search above and press return to search.
திண்டுக்கல்: வீட்டில் அறைக்குள் உள்புறமாக தாளிட்டு கொண்டு தவித்த குழந்தை மீட்பு
தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ஹைட்ராலிக் ஓபனர் மூலம் கதவை திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் வீட்டில் அறைக்குள் உள்புறமாக தாளிட்டு கொண்டு தவித்த குழந்தையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அசாரூதின், இவரது ஒன்றரை வயது குழந்தை ஆசாத் வீட்டின் ஒரு அறைக்குள் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு தவித்தது. இதனால் பெற்றோர் கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை உடைக்க முடியாததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் விரைந்து சென்று ஹைட்ராலிக் ஓபனர் மூலம் கதவை திறந்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையின் பெற்றோர்கள் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.