தேசிய அளவிலான எறிபந்து போட்டி : 12 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு
இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் 14 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் 12 மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர்.
தேசிய அளவிலான எறிபந்துபோட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனை தேர்வு,திண்டுக்கலில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தில்லியில் நடக்கும் 43 வது தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கான தமிழக அணி தேர்வு திண்டுக்கல் வித்தியாபார்த்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான இறுதி தேர்வு நடந்தது. இந்தியன் எறிபந்து கழகத்தின் பொருளாளரும், தமிழ்நாடு மாநில எறிபந்து கழக தலைவர் டி .பால விநாயகம், திண்டுக்கல் வித்யா பார்த்தி பள்ளியின் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு மாநில எறிபந்து கழக செயலாளர் எஸ் ராஜா, திண்டுக்கல் மாவட்ட எறிபந்து கழக தலைவர் எஸ் .ரமேஷ் , செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவள்ளுர், சென்னை , ராமநாதபுரம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கரூர், ஈரோடு,மதுரை, நீலகிரி, சேலம், காஞ்சிபுரம் மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இதில் 14 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதுகுறித்து எறிபந்து கழகத்தின் தலைவர் டி. பாலவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் எறிப் பந்த அணி மிக வலுவாக உள்ளது. வரும் ஜனவரி 5 முதல் 8வரை தில்லியில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் தமிழக அணி வீரர்கள் பங்கேற்பார்கள் .மாநில அளவிலான அணி இன்று தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு இந்த பள்ளியில் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு இவர்களுக்கு விளையாட்டு ஆர்வலர்கள் ஊக்கமளித்து வருகின்றனர் என்றார்.