Begin typing your search above and press return to search.
இலவச வீட்டு மனைபட்டா வழங்கக் கோரி 50 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரிடம் மனு
அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் எங்களால் வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை
HIGHLIGHTS
இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் திண்டுக்கல்மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இங்கு வந்திருந்த திண்டுக்கல் அருகே உள்ள பால் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், எங்கள் பகுதியில் உள்ள நடுமாலைப்பட்டி, காமாட்சி நகர், அபிராமி நகர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் எங்களால் வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை. எனவே எங்களுக்கு அதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருக்க வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.