கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் தினம் அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறுது.
HIGHLIGHTS
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுவதற்கு முன்பு 40 நாட்கள் இரவும் பகலும் நோன்பிருந்தார். இயேசுவை கிறிஸ்துவை பின்பற்றும் விதமாக கிறிஸ்தவர்கள் வருடத்தில் 40 நாட்கள் நோன்பு மேற்கொள்வர், இது தவக்காலம் என்று அழைக்கப்படும். இந்த தவக்காலத்தின் முதல் நாளான இன்று (17.02.2021) சாம்பல் புதன் (திருநீற்றுப் புதன், விபூதி புதன்) என்று கூறுவர்.
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துவ தேவாலயத்தில் தவக்காலத்தில் குருத்து ஞாயிறன்று வழங்கப்படும் தென்னங்குருத்துகளை மக்கள் வாங்கி சென்று தங்களது வீடுகளில் சிலுவை போன்ற அமைப்பில் செய்து அதனை பாதுகாப்பார்கள், தவகாலம் துவங்குவதற்கு முன் அந்த குருத்தோலைகளை பெற்று தேவாலயத்தில் மந்திரித்து அதனை எரித்து சாம்பலாக மாற்றி தேவாலய பாதிரியார்கள் கிறிஸ்தவர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின் 40 நாட்களும் இந்த சாம்பலை அவர்களின் நெற்றியில் இட்டுக் கொள்வர்.
அவ்வாறு இன்று திண்டுக்கல் மாவட்டம் புனித வளனார் தேவாலயத்தில் சாம்பல் புதன் பூசை திருப்பலி நடைபெற்றது. ஆயர் ஆபேல், தேவாலய பங்கு தந்தையர்கள் சகாய ராஜ், ஜெயசீலன், ஜெபராஜ், அந்தோனி சாமி ஆகியோர் திருப்பலி பூசை வைத்து தவக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், பூசைகள், ஜெபம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் திருப்பலி முடிந்தவுடன் மக்களுக்கு சாம்பல் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாம்பல் புதனை உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், லுத்தரன் திருச்சபையினர் கடைபிடிப்பர்.