தர்மபுரி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு: விவசாயிகள் வேதைனை
தர்மபுரி பூக்கள் சந்தையில் கடந்த ஒரு வாரமாக விலை சரியத்தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூக்கள் சந்தையில் கடந்த ஒரு வாரமாக பூக்களின் விலை விலை குறைந்து விற்பனையாகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிக விலைக்கு விற்கப்பட்ட பூக்கள் தற்போது குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. வழக்கமாக புரட்டாசி மாதங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சன்னமல்லிகிலோ 300 ரூபாய்க்கு விற்பனையான பூ தற்போது 220 ரூபாய்க்கு, 500 ரூபாய்க்கு விற்பனையான குண்டுமல்லி கிலோ 320 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 800லிருந்து 300 ரூபாய்க்கும் .அரலி 300லிருந்து கிலோ 40 ரூபாய்க்கு, சாமந்தி கிலோ 70லிருந்து 20 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 20 ரூபாய்க்கு சென்டுமல்லிகிலோ 10 ரூபாய்க்கு ரோஸ் 20 ரூபாய்க்கும் விற்பனையானது. வழக்கமாக காலை 9 மணிக்கு விற்றுத் தீரும் சாமந்திப் பூக்கள் விற்பனையாகமால் உள்ளது.