/* */

தருமபுரியில் மதம் மாறி காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி : எஸ்.பி.ஆபிசில் தஞ்சம்

மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.

HIGHLIGHTS

தருமபுரியில் மதம் மாறி காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி : எஸ்.பி.ஆபிசில் தஞ்சம்
X

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் சஹானா தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதில்தான் சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் கல்லூரி படிப்பிற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க சென்ற போது தருமபுரி மாவட்டம் தொப்பூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவரை கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்ததாகவும் ஒரு வாரத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்னுடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும்,

என்னுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் . எங்களுடைய உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேர இருப்பதால் பாதுகாப்புவழங்குமாறு, கேட்டுதருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார்

Updated On: 19 Jun 2021 5:15 PM GMT

Related News