மின்சார வாரிய பொறியாளரை மாற்ற பா.ம.க. போராட்டம்.!
தருமபுரியில் செயல்பட்டு வரும் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் இந்திரா மீது, பாட்டாளி தொழிற்சங்கத்தின் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவரை வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கண்டனம் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்திரா, மின்சார வாரிய நிர்வாகத்தில் சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும், தான் என்ற ஆணவத்தில் பல்வேறு விஷயங்களில் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக பாமக தொழிற்சங்கத்தினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
அலுவலகத்தில் பணியாற்றும் ஒப்பந்ததாரர்களைஎம், தொழிற்சங்கத்தினரையும், தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களையும் மதிக்காமல் பொறுப்பற்று நடந்து கொள்கிறார் எனவும் கூறினர். மேலும், வாரிய உத்தரவுகளையும், விதிமுறைகளையும் மதிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். எனவே அவரை உடனடியாக வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என துண்டறிக்கை வினியோகம் செய்து வருகின்றனர்.
செயற்பொறியாளருக்கு எதிராக துண்டறிக்கை மற்றும் பிளக்ஸ் பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வரும் சம்பவம் தருமபுரி அரசு ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.