கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் "கபீர் புரஸ்கார்" விருது பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தெரிவித்துள்ளார்.
நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் மத நல்லிணக்கத்திற்க்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும், தேசிய ஒருமைபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், சிறப்பாக பணியற்றியர்வர்களுக்கு ஆண்டு தோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022 ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டரங்கம், தர்மபுரியில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 07.12.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டரங்கம், தர்மபுரியில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனவே தர்மபுரி மாவட்டத்திலுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.