/* */

கடலூரில் புதிய பாலம் கட்ட திட்டம் தயார்- அதிகாரிகள் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலைத்துறை, மத்திய தரைக் வழி போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

HIGHLIGHTS

கடலூரில் புதிய பாலம் கட்ட திட்டம் தயார்- அதிகாரிகள் ஆய்வு
X

கடலூரில் புதிய பாலம் கட்டப்பட உள்ள இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடலூர் நகரின் மையப்பகுதியில் செல்லும் கெடிலம் ஆற்றின் ஒரு கரையில் நகராட்சியின் புதுநகரும், மற்றொரு கரையில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியும் அமைந்துள்ளது.

இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமப்பட்டன.

இதையடுத்து இரும்பு பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு அண்ணா பாலம் என்று பெயரிடப்பட்டது. இந்த பாலம் வழியாகத் தான் தற்போது வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடலூர் நகரில் தற்போது மேலும், மேலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அண்ணா பாலம் அருகே புதிய பாலம் கட்ட கோரிக்கை எழுந்து அதன்படி திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோயில் அருகிலிருந்து அண்ணா பாலம் வரை தனி வழித்தடம், மற்றும் புதிதாக கட்ட உள்ள பாலம் குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை, மத்திய தரை வழி போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 30 Sep 2021 5:20 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!