/* */

கடலுார் கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி, நெல்மணிகள் நனைந்து வீணாகியது

கடலுாரில் பெய்த திடீர் மழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி, நெல்மணிகள் நனைந்து வீணாகியது.

HIGHLIGHTS

கடலுார் கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி,  நெல்மணிகள் நனைந்து வீணாகியது
X

கோப்புப்படம்

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் துவங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 5ம் தேதி பெய்த மழையால், பல இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டை நனைந்தது. நேற்று நள்ளிரவு கடலுாரில் திடீரென மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

திடீர் மழையால், கடலுாரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.மழையால் கடலுார் தோட்டப்பட்டு, பண்ருட்டி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைத்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகள் குவியல் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்

தோட்டப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக மழையால் நெல்மூட்டைகள் நனைந்துள்ளது. எனவே, சேதமான நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நெல்லை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 12 July 2021 3:52 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்