தியேட்டர்களில் போலீசார் ஆய்வு: 'கட்'அடித்த பள்ளி மாணவர்கள் சிக்கினர்
கடலூரில், தியேட்டர்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று போலீசார், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களிலும், 50 சதவீதம் பேர் அமர்ந்து படம் பார்க்கும் வகையில், இருக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கடலூரில் உள்ள திரையங்கில் கொரோனா விதிகள் கடைபிடிக்கபடுகிறதா என்று, வருவாய்துறையினர் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டர். சோதனையின்போது, பள்ளி மாணவர்கள் 10 க்கு மேற்பபட்டோர் பள்ளிக்கு செல்லாமல் திரையங்கில் படம் பார்த்து கொண்டிருந்தனர்.
அவர்களை வெளியே அழைத்து வந்து போலீசார், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு 9,10,11,12 ஆகிய வகுப்புகள் மட்டும் பாதுகாப்பாக வகுப்பு நடத்துகிறது. இது போல் நீங்கள் பள்ளி செல்லாமல் திரையரங்குக்கு வருவது நியாமற்ற செயல். இதுபோல் பள்ளிக்கு செல்லாமல் இனி திரையங்குக்கு வரக்கூடாது என அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினர்.