Begin typing your search above and press return to search.
கடலூரில் அரசு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணியின்போது சிக்கிய ஆமை
கடலூரில் அரசு பள்ளி சுத்தப்படுத்தும் பணியின்போது சிக்கிய ஆமையை வனத்துறையிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்படைத்தார்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன.
கடலூர் துறைமுகம் பகுதியில் அரசு உதவி பெறும் புனித தாவீது மேல்நிலைப்பள்ளி உள்ளது.இங்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளி திறப்பையொட்டி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
பள்ளியில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்ட தலைமை ஆசிரியர் கங்காதேவி பள்ளி வளாகத்தில் ஆமை ஒன்று இருப்பதை கண்டார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஆமை பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது