/* */

கடலூர்:மாரிதாஸ் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு

மாரிதாஸ் மீது தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

கடலூர்:மாரிதாஸ் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு
X

கடலூர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் மாரிதாஸ் மீது தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்புவது போன்று, போலியாக தயாரித்து, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஒரு வீடியோவை மாரிதாஸ் என்பவர் வெளியிட்டுள்ளார்.இந்த செய்தி போலியானது, இதை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்த தனியார் தொலைக்காட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் அங்கு அந்த வீடியோவை நீக்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ அவர் முன்வரவில்லை. எனவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வரும் மாரிதாஸ் மீதும், அவரது குழுவினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 27 Sep 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  2. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  3. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  4. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  5. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  6. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  9. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  10. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்