/* */

செங்கல்பட்டில் உலக புத்தக தின விழா

செங்கல்பட்டில் உலக புத்தக தின விழா

HIGHLIGHTS

செங்கல்பட்டில் உலக புத்தக தின விழா
X

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, முன் வர வேண்டும் என, தமுஎகச செங்கல்பட்டு கிளை சார்பாக தேடி வாசிப்போம் கூடி விவாதிப்போம் என்ற மாதாந்திர நிகழ்வின் போது புத்தக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதம், உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், உலகம் முழுக்க புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமதாக புத்தக ஆர்வலர்கள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் உலக புத்தக தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் தமுஎகச செங்கல்பட்டு கிளை சார்பாக தேடி வாசிப்போம் கூடி விவாதிப்போம் என்ற மாதாந்திர நிகழ்வின் முதல் மாத நிகழ்வாக "தாராபாரதி கவிதைகள்" என்ற நூலின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கிளையின் பொருளாளர்.பி.வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். செங்கை மாவட்ட து.தலைவர் கருணாமூர்த்தி துவக்கி வைத்தார். கவிதை நூலை கவிஞர் சீனி சந்திரசேகர் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் புத்தக வாசிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 April 2021 3:23 AM GMT

Related News