செங்கல்பட்டில் 4,048 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் தகவல்
செங்கல்பட்டில் 4, 048 கர்ப்பிணி பெண்களுக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிறப்பு மருத்துவ தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இம்மருத்துவ முகாமில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறப்பு தனிவரிசை அமைக்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இன்றைய தினம் வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் 4048 நபர்களுக்கும், மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 2228 நபர்களுக்கும் சிறப்பு முகாம்களின் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்த மண்டல வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பிரியாராஜ் செங்கல்பட்டு நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி மற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.