மறைமலை நகர் கூடுவாஞ்சேரி பகுதிகளில் டூ விலர் திருடிய இருவர் கைது
மறைமலை நகர் கூடுவாஞ்சேரி பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு, தாம்பரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி , சிங்கபெருமாள்கோயி்ல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்
இந்நிலையில், நேற்று மறைமலைநகர் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் மடக்கிப் பிடித்து, ஆவணங்களை சோதனை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த மாரி என்கிற கலிபுல்லா வயது (23) படாளம் பகுதியைச் சேர்ந்த ரிஷ்வன் வயது (32) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.