/* */

அரியலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
X
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரகாஷ்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழுதுடையான் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் பிரகாஷ்(27). கூலித்தொழிலாளி. இவர் அதே ஊரை சேர்ந்த திருப்பூரில் பணிபுரிந்து வந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் தந்தை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலை கதிரவன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் பிரகாஷை ஒருவருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷிற்கு வழங்கியுள்ளனர்.

Updated On: 23 Sep 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?