உலக வன நாள் தினத்தை முன்னிட்டு அரியலூரில் விழிப்புணர்வு பேரணி
உலக வன நாள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் - 21 உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த உலக வன நாள் கொண்டடாடப்படுவதின் நோக்கம் உலகம் வெப்பம் அடைவதை தடுப்பதற்காக மற்றும் பல்லூயிர் பெருக்கம் நடைபெறுவதற்காகவும் ஆகும். பொதுமக்களிடையே மரம் நடுவதன் அவசியம் குறித்தும், மரம் நடுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வன நாள் கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக வன நாளினை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் வன சரக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் மரம் நடுவதன் அவசியம் குறித்தும், மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அரியலூர் பேருந்து நிலையம் வரை நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட வன அலுவலர் கணேஷ், வன சரக அலுவலர் பழனிவேல், சமூக நலகாடு வனவர்கள், சரக வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் அரசு கலைக்கல்லூர் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.