/* */

திருமானூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அரியலூர்மாவட்டம் திருமானூர் அடுத்த க.மேட்டுத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(55). மாற்றுத்திறனாளியான இவர், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவராக இருந்தார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் முன்பு உள்ள சிமென்ட் சாலையில், நெல் காயவைத்து அள்ளிக்கொண்டிருந்தார்.

அப்போது, இவரது வீட்டின் அருகே மேற்கூரை இல்லாத மகாலிங்கம் என்பவரின் வீட்டின் சுவர் தொடர்மழையின் காரணமாக ஊறி இருந்த நிலையில், இடிந்து விழுந்தது.

இதில், இடிபாடுகளில் சிக்கிய சுப்பிரமணியனை, திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 8:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...