Begin typing your search above and press return to search.
இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு
கீழப்பழுவூர் அருகே இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை அருகில் அரியலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும், கீழப்பழுவூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டனர்.
இதில் வாகனத்தில் இருந்து தார்சாலையில் படுகாயத்துடன் விழுந்த காதர்மைதீன் மற்றும் வல்லரசு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயமடைந்தனர்.
விபத்துகுறித்து அறிந்த சாலையோர காவல் போலீசார் உடனடியாக காயமடைந்தவர்களை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். கீழப்பழுவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.