/* */

அரியலூர் மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்ட வட்டம் வாரியாக நாளை 10.12.2021 (வெள்ளிக்கிழமை) பட்டா திருத்த முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமங்களில் நாளை 10.12.2021 (வெள்ளிக் கிழமை) அன்று நடக்கவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

வட்டம் வாரியாக நாளை 10.12.2021 அன்று (வெள்ளிக்கிழமை) முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம்:

அரியலூர் வட்டத்தில் புங்கங்குழி மற்றும் ஓரியூர் கிராமங்களுக்கு புங்கங்குழி கிராம சேவை மைய கட்டிடத்திலும் அன்னிமங்கலம் மற்றும் மஞ்சமேடு கிராமங்களுக்கு அன்னிமங்கலம் கிராம சேவை மைய கட்டிடத்திலும், செந்துறை வட்டத்தில் குழுமூர் மற்றும் அயன்தத்தனூர் கிராமங்களுக்கு குழுமூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் சூரியமணல் மற்றும் இடையார் கிராமங்களுக்கு சூரியமணல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் வேம்புகுடி கிராமத்திற்கு வேம்புகுடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் இலையூர்(மே) மற்றம் இலையூர்(கி) கிராமங்களுக்கு இலையூர்(மே) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் முகாம் நடக்கவுள்ளது.

மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயன் அடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Dec 2021 8:03 AM GMT

Related News