Begin typing your search above and press return to search.
பொது பாதை அமைத்து தரக்கோரி அரியலூர் கலெக்டரிடம் இருளர் இன மக்கள் மனு
பொது பாதை அமைத்து தர கோரி மழையில் நனைந்த படி இருளர் இன மக்கள் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பழங்குடி இருளர் இன மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்கள் பகுதியிலிருந்து விருத்தாச்சலம் மெயின் ரோட்டிற்கு வருவதற்கு தனிநபர் பட்டா இடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்பொழுது இடத்தின் உரிமையாளர் வேலி போட்டதால் தங்களுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்து தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இன்று வருகை தந்தனர்.
மேலும் மழையில் மழையில் நனைந்தபடி சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட இருளர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்களுக்கு மாற்றுவழி அமைந்தால் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரி, மருத்துவமனை செல்ல முடியும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.