Begin typing your search above and press return to search.
கீழப்பழுவூரில் காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்பு
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
கீழப்பழுவூர் கடைவீதியில் இருந்த காவல் நிலையம், பழுதடைந்ததால், திடீர் குப்பம் பகுதியில், ரூ.93,00,000 மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. காவல்நிலைய புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இதையடுத்து, அரியலூர் மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலைய புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர்.