Begin typing your search above and press return to search.
அரியலூர்: சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் சிறுமியின் அப்பா, அம்மா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். சிறுமி வீட்டில் தம்பி மற்றும் தாத்தாவுடன் இருந்துவருகின்றனர். இந்நிலையில் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை பழுது பார்க்க பெரம்பலூர் மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவர் வந்துள்ளார்.
வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். விஜயன் கேமிராவை பழுது பார்த்து கொண்டிருந்த நிலையில், யாரிடமே சிறுமி செல்போனில் பேசியதை கவனித்த விஜயன், அப்பாவிடம் கூறி மாட்டிவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் விஜயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.