/* */

மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து திருமானூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி திருமானூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து திருமானூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருமானூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் பேருந்து நிலையத்தில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. தமிழக விவசாயத்தையும், பதினைந்து மாவட்டத்திற்கு ஆழ்குழாய் மூலம் செல்லும் குடி தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில், ஷட்டர் பலகையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும்.

மேலும், தா.பழூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், கொள்ளிடம் ஆற்றில், தூத்தூர், வாழ்க்கை இடையே அரசு அறிவித்த கதவணை திட்டத்தை தமிழக அரசு உடன் செயல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 March 2022 8:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?