மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து திருமானூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி திருமானூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், திருமானூர் பேருந்து நிலையத்தில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. தமிழக விவசாயத்தையும், பதினைந்து மாவட்டத்திற்கு ஆழ்குழாய் மூலம் செல்லும் குடி தண்ணீரையும் பாதுகாக்க வேண்டும். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில், ஷட்டர் பலகையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும்.
மேலும், தா.பழூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், கொள்ளிடம் ஆற்றில், தூத்தூர், வாழ்க்கை இடையே அரசு அறிவித்த கதவணை திட்டத்தை தமிழக அரசு உடன் செயல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.