Begin typing your search above and press return to search.
மாணவியை கடத்தி சென்று வன்கொடுமை: கட்டித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
அரியலூரில் மாணவியை கடத்தி சென்று வன்கொடுமை செய்த கட்டித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், அமீனாபாத் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளி பாஸ்கர். கடந்த 2017 ஆம் ஆண்டு பள்ளி செல்ல லிப்டு கேட்டு சாலையில் நின்று கொண்டிருந்த 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவியின் புகாரை அடுத்து அரியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதி ஆனந்தன் குற்றவாளி பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். மேலும் 60 ஆயிரம் அபராதம் விதித்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மாணவி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.