Begin typing your search above and press return to search.
காந்தி பிறந்தநாளில் கிராமசபைக் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் அக்.2 ல் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பு:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 02.10.2022 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படும்.
இக்கிராம சபைக் கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.