அரியலூர் நகரில் தொடர் கஞ்சா விற்பனை: பெண் மீது குண்டர் தடுப்பு சட்டம்
அரியலூர் நகரில், தொடர் கஞ்சா விற்பனை பெண் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (35) என்பவர், அரியலூர் அரசு மருத்துவமனையில் பின்புறத்தில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பது தெரியவந்தது. இதை அடுத்து, ஈஸ்வரியை கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மேலும் வெளியே இருந்தால் போதைப்பொருள் விற்பதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் ஈஸ்வரி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, அரியலூர் நகர காவல் ஆய்வாளர் அலாவுதீன் மற்றும் அரியலூர் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன் பரிந்துரை செய்தனர்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, இப்பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணா சரஸ்வதி, ஈஸ்வரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்க ஆணையிட்டார். அதற்கான ஆணை பிரதியை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் திருச்சி பெண்கள் சிறையில் அளித்தனர்.