/* */

சிறுமியை மிரட்டி தொடர்ந்து பலாத்காரம்: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

சிறுமியை மிரட்டி தொடர்ந்து பலாத்காரம்: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த ரஞ்சித் (21), விஜய்(28) , ரமேஷ் (23) , சத்யராஜ் (24) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக சில நாட்களில் 15 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி குற்றவாளிகள் 4 பேரையும் ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 25 Sep 2021 2:45 PM GMT

Related News