Begin typing your search above and press return to search.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து அரியலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
அரியலூர் பேருந்து நிலையம் முன்பு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.கே.என் ராமஜெயலிங்கம், முன்னாள் எம்.பி. ஆ.இளவரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், நகரச் செயலாளர்கள் அரியலூர் ஏ.பி.செந்தில், ஜெயங்கொண்டம் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.